எம்.ஐ.டி தமிழ்மன்றம் நடத்திய பொங்கல் விழா!

பொங்கல் மற்றும் போட்டிகளின் அறிக்கை தைப்பொங்கல் என்பது தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.       தைப்பொங்கல் வரலாறு ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால்,[…]

 நினைவுகளின் பக்கங்கள்

பிடித்தும் பிடிக்காமலும் புரட்டப்படும் சில புத்தகங்களின் பக்கங்களென சரிந்தோடுகின்றன இக்கல்லூரி நாட்கள். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் ஒரு புதிய அத்தியாயத்தின் பிறப்பிடம் ஆகின்றன. இங்கே எழுதப்படும் கதைகளும் தீட்டப்படும் ஓவியமும் கற்பனையோ கனவின் நிழலுருவமோ அல்ல யதார்த்தங்களின் கலவை. வண்ண ஓவியமாக்க நினைத்து கருமை மட்டுமே படர கருப்பு வெள்ளையில் மிளிரும் பக்கங்களும் ஏராளம். எழுத மனம் வராமல் முதல் சில வரிகளிலே பேனா முனை முறிக்கப்பட்டு வறண்டு போய் வெளிரிப்போன பல வெள்ளைப்பக்கங்களும் இங்கே உண்டு.[…]

வாக்குரிமை நம் வாழ்வுரிமை

நாளை நம் எதிர்காலம் கறை படியாமல் இருக்க, நாம் நம் ஆள்காட்டி விரல்நுனியை கறை படுத்திக்கொள்ளும் நாள்! நாளை நாம் சிந்தித்துச் செலுத்தப்போகும் வாக்கு, நம் நாட்டின் நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கு நாமிடும் தூக்கு! கவிஞர் : கருப்பசாமி, நான்காம் ஆண்டு, Aerospace Engineering. #TheMITQuill #Elections2019

அன்பின் இலக்கணமாய்…

MIT எனும் Main program-ல் Infiniteloop ஆக அமைந்த உறவாம், “Snrs-jnrs” என்ற இலக்கணம், ஓர் சொல்லில் அடங்கா காவியம்! முதன்முறை பயந்த விழிகளுடன் சொற்கள் வெளிவராமல் நின்றநேரம் “Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா?” என்று முழித்து நின்ற நொடிகளையும் ஏனோ நினைக்கையில் நகை தான் தோன்றுகிறது! “Ragging” என்ற பெயரில் எங்கள் சேட்டையை நீங்கள் ரசித்து, “Task” என்ற பெயரில் உங்கள் குறும்பை நாங்கள் அறிந்து, “Series”  என்ற குடும்பமாகி, “Treat” என்று பாசங்கள்[…]

நீர் இன்றி அமையாது உலகு!

               அகர முதல எழுத்தெல்லாம் சரி வர பாடி, குறளின் குரலாய் விளங்கும் திருவள்ளுவர் உதிர்த்தச் சொற்கள் இவை.கொஞ்சம் அந்த தொடரின் பொருள் குறித்து சிந்தியுங்கள்.        உலகம் என்னும் எந்திரம் உயிராட நடமாட , அப்புவியில் உள்ள உயிர்கள் உயிர் வாழத்தேவை, நீர்.சுருக்கமாகச் சொன்னால், எந்திரத்திற்கு எரிபொருள் போலே , புவிக்கு நீர்.நீர் இல்லாத உலகம் என்பது அன்பு இல்லாத வாழ்க்கையை போலவே,நினைத்துக் கூட பார்க்க முடியாது.[…]

கல்வி முறை கண்ட மாற்றங்கள் , அதன் விளைவுகள்

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அதன் அடையாளம் , மொழி ஆகியவற்றை அழித்தால் தான் இது சாத்தியம். இது யாவரும் அறிந்ததே. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர், இந்திய நாடு பல வகைகளில் செல்வம் மிகுந்த பூமியாகவே இருந்தது. அவரவர் அவரவரது தொழில்களைச் செய்து இன்புற்று வாழ்ந்தனர். பல அபூர்வ ஒளி வீசும் கற்கள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. விவசாயம் நன்றாக நடைபெற்று வந்தது. வாஸ்கோ டா காமா முதன் முதலாக இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து கி.பி . 1498 ஆம்[…]

கடன்

தெய்வமே ஏன் வந்தாயோ ? என் வாழ்க்கையில் ஏன் வந்தாயோ ? உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ ? கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ ? வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ ? அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ ? திருவிழாவில் தொலைந்த பச்சைப் பிள்ளையின் ஏக்கத்தை வளர்ந்த[…]

சாதிக்கப் பிறந்தவனடா நீ!

  வெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால்  நீ வீழாதே! காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே! தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு! வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும்! இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]

தோழி

  அவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை? சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]

 கண்ணன் என்னும் மாயன்

  அவன் கண்ணும் யாம் அறியா, அவன் குழலும் எம்செவி நுகரா, அவன் கவினும் யாம் காணா, அவன் இருப்பிடம் யாம் அறியா, அவன் காலத்தும் யாம்வாழா, அவன் பண்பும் யாம் உணரா. ஏனோ என் நெஞ்சம் அவன் அடி தழுவத் துடித்தது, தழுவிய பின் கண்டறிந்தேன், அவனை என் நெஞ்சினுள்!   கவிஞர் கா.கிருத்திகா, இரண்டாம் ஆண்டு, Computer Technology.