விவசாயிகளின் கண்ணீரை சிறிது சிதற விடுகிறேன்
ஆதரவு கேட்டோம் நாங்கள்; ஆதாயம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள். ஊக்கம் கேட்கிறோம் நாங்கள்; ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள். உரம் கேட்கிறோம் நாங்கள்; உயிரைக் கேட்கிறீர்கள் நீங்கள். தண்ணீர் கேட்கிறோம் நாங்கள்; பதிலுக்குக் கண்ணீர் கேட்கிறீர்கள் நீங்கள். உழுவ நிலமிருந்தும் உழுவநிலைக் கேட்கிறோம்; வறண்டு விட்டது கண்கள்; இருண்டு விட்டது பார்வை; இழந்து கொண்டு இருக்கிறோம் வாழ்வை. விவசாயத்திற்கு கொடுக்க வேண்டும் சலுகை; கவனிக்காவிட்டால் நாடென்கும் பசி அழுகை. ஏர்க்கலப்பைகள் இப்பொழுதுமுண்டு ஏராளம்; இதைக்கண்டு கொள்ளவில்லை நமது[…]