இதயத்தின் ஏக்கங்கள்

  இறைவனே!…இறைவனே!…   என் இருள் இதயமே   உன் இருவிழிகளின் இலக்கா!…   இருட்டினில் இலகிய என் இமைகளும்   ஒளியினால் ஓங்குமா?…   எங்கிலும் ஏகாந்தமே!…   இறுதியில் ஏமாற்றமே!…   ஏக்கங்கள் பல ஏந்தியே   எனது இதயமும் இயங்குது!…   ஏற்றங்களில் என்றாவது எனதுயிர் இசையுமா?…   கவிஞர்: பிரதாப், மூன்றாம் ஆண்டு, Aeronautical.

வாழ்க்கை என்னும் பயணம் – கவிதை

விரும்பியது எல்லாம் நடக்குமா விண்மீன் கையில் கிடைக்குமா வான்கடலில் விண்மீன் பிடிக்க விரும்பினேன் பிரயாணம் நடுவில் தயங்கினேன் – மிகவும் சினந்தேன்-கொஞ்சம் வியந்தேன்-நிறைய வெட்கி குனிந்தேன் -இப்படியும் சில வாழ்வானது ஒன்றே செயலாற்றுவது நன்றே பயணத்தின் தொடக்கம் இதுவே இன்னும் செல்வோம் தூரம் காற்றும் துணை வரும் என்று தொடர்ந்தேன் தேங்காய் நார்களின் கடுமை கண்டேன் தொடர்வண்டிகளின் தொடர்ச்சியாய் புதிய முகங்கள் கண்டேன் அவர்களிடம் உழைப்பை கண்டேன் மழைத் துளிகளின் ஈரம் கண்டேன் துரோகங்கள் கசந்ததை உணர்ந்தேன்[…]

மனதிற்குள் மணம் – கவிதை

(அ)ன்பின் இலக்கணம் கண்டவளோ!! (ஆ)ருயிர்த் தோழியாய் வந்தவளோ!! (இ)தயத்தில் இமையாய் இமைப்பவளோ!! (ஈ)ன்றெடுத்த தாயாய் இணைந்தவளோ!! (உ)றவுக்கு உயிர் ஊட்டியவளோ!! (ஊ)டலுக்கு இன்பம் பயிர்த்தவளோ!! (எ)ம் காதலுக்கு ஓவியமானவளோ!! (ஏ)ட்டில் எழுதாச் சித்திரமானவளோ!! (ஐ)யம் விலகி வந்தடைந்தவளோ!! (ஒ)ளிக்கும் சித்திரைத் திங்களுமானவளோ!! (ஓ)ரக்கண்ணில் என்னை மாய்த்தவளோ!! (ஔ)டதம் தந்துச் சென்றவளோ!!   கவிஞர்: மணிகண்டன், இறுதி ஆண்டு, Information Technology.