வீழ்ச்சி இனியில்லை! -கவிதை

  முடியாது என்பதை முடக்கிவிட பார். அவ்வாறு நினைத்திருந்தால் தேநீர் ஆற்றுபவரது முதுமை பலரது வாழ்வை நிர்ணயித்திருக்காது. சிறுதுளி தாங்காத கண்ணின் குழியாக இராது; வெள்ளத்தையும் உள்வாங்கும் கடலாக சோதனைகளை எதிர்கொள்! துவண்டுவிழும் நேரம்தனில், உன்னை வெளியேற்றியபோது ‘அவள்’ சிரித்த ஓசையின் தன்மையை நினைவுகூரு. நீரற்று உலர்ந்த இலைகளே தீயாக கொழுந்துவிட்டு வாய்ப்பளிக்க மறுத்த கானகத்தை சாம்பலாக்கும். கவிஞர்:ம.தினேஷ், மூன்றாம் ஆண்டு  ,Automobile Engineering.