வாடிய பயிரும் உரமான உயிரும்- கவிதை

  வான் பார்த்த பூமியில் – நான் வீற்றிருக்கிறேன் உயிர் தாங்கி ஒரு துளிக்குக் காத்திருக்கிறேன் வியர்வை உண்டு வளர்ந்தவள் நான் வாசம் வீசினேன் பரிதி வரும் திசை தனிலே பார்வை பதித்தேன் ஒற்றைக் காலை ஊன்றி – தாகம் தணிக்க பார்த்தேன் வாடைக் காற்று வருடும் வேளை- என் நிலைமை மறந்தேன் தேன் வழிந்த கண்ணங்களைத் தாரைவார்த்தேன் இன்று- உயிர் தந்த என் மண்ணிற்கு உரமாய் மாறப்போகிறேன்.   கவிதையை தொகுத்தவர் : க.பவித்ரா, இரண்டாம்[…]