கண்ணன் என்னும் மாயன்

 

அவன் கண்ணும் யாம் அறியா,

அவன் குழலும் எம்செவி நுகரா,

அவன் கவினும் யாம் காணா,

அவன் இருப்பிடம் யாம் அறியா,

அவன் காலத்தும் யாம்வாழா,

அவன் பண்பும் யாம் உணரா.

ஏனோ என் நெஞ்சம்

அவன் அடி தழுவத் துடித்தது,

தழுவிய பின் கண்டறிந்தேன்,

அவனை என் நெஞ்சினுள்!

 

கவிஞர் கா.கிருத்திகா, இரண்டாம் ஆண்டு, Computer Technology.

4 thoughts on “ கண்ணன் என்னும் மாயன்

Leave a Reply to Ramya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *