செஞ்சிலுவை.. கல்லறை வரை

யார் யாரோவாய் எங்கிருந்தோ வந்து ஓரறையில் குழுமி புதிய அறிமுகங்கள் கிடைக்க புதன்கிழமைகள் அறிவின் புதிய விடியல்கள் ஆக வருகை பதிவில் துவங்கி வழியனுப்பும் வரை உடனிருக்கும் மூத்தோரே – நீங்கள் எம் சொந்தங்கள்! செய்தும் செய்து முடிக்காமலும் நாங்கள் பங்கேற்ற project review க்கள் எங்கள் YRC அலப்பறைகள் உச்சக்கட்டம்! Camp என்று சொன்னவுடன் ஒதுங்கி ஓடிய பலருக்கிடையில் தேடி வந்த சிலருக்காக எல்லா ஏற்பாடுகளும் எங்கள் மூத்தோர் செய்து வைக்க வேலைகள் கற்றதைவிட நாங்கள்[…]

வாழ்க்கை என்னும் கடற்பயணம்

பயணத்தின் பக்கங்கள் கனவும் கைமீறி போனது -என் கடலும் உள்வாங்கிப் போனது கரைசேருமா என் கப்பலும் கைசேருமா என் நாட்களும் மழையடித்தும் கடும் புயலடித்தும் மனம்தளராமல் தள்ளாடுது என்தேகமும் மனதும் மன்றாடுது, மறம்கொண்டிட மாற்றம் மறைந்தாடுது, நான்சோர்ந்திட சோதனை அவை சாதனையாக்கிட சோகங்கள்பல தாண்டியே வெறியாடுது வெற்றுஇதயம் வெற்றியை வேட்டையாட! கவிஞர்: பிரதாப், இறுதி ஆண்டு, Aerospace Engineering.

நீ மறந்தாய்

  ஓ மானிடா! மனித இனமே மறைந்து போனது,நீ மறந்தாய்; மங்கையின் மானம் மழுங்கி போனது,நீ மறந்தாய்; மண்ணைக் காத்தவன் மண்ணுக்குள்ளே போனானே,நீ மறந்தாய்; மறைமுகமாக வந்து மரபையே அழித்தானே,நீ மறந்தாய்; நீ மறாவாமல் இருப்பது மறதி ஒன்றை மட்டுமே!   கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.

இதயத்தின் ஏக்கங்கள்

  இறைவனே!…இறைவனே!…   என் இருள் இதயமே   உன் இருவிழிகளின் இலக்கா!…   இருட்டினில் இலகிய என் இமைகளும்   ஒளியினால் ஓங்குமா?…   எங்கிலும் ஏகாந்தமே!…   இறுதியில் ஏமாற்றமே!…   ஏக்கங்கள் பல ஏந்தியே   எனது இதயமும் இயங்குது!…   ஏற்றங்களில் என்றாவது எனதுயிர் இசையுமா?…   கவிஞர்: பிரதாப், மூன்றாம் ஆண்டு, Aeronautical.

வாழ்க்கை என்னும் பயணம் – கவிதை

விரும்பியது எல்லாம் நடக்குமா விண்மீன் கையில் கிடைக்குமா வான்கடலில் விண்மீன் பிடிக்க விரும்பினேன் பிரயாணம் நடுவில் தயங்கினேன் – மிகவும் சினந்தேன்-கொஞ்சம் வியந்தேன்-நிறைய வெட்கி குனிந்தேன் -இப்படியும் சில வாழ்வானது ஒன்றே செயலாற்றுவது நன்றே பயணத்தின் தொடக்கம் இதுவே இன்னும் செல்வோம் தூரம் காற்றும் துணை வரும் என்று தொடர்ந்தேன் தேங்காய் நார்களின் கடுமை கண்டேன் தொடர்வண்டிகளின் தொடர்ச்சியாய் புதிய முகங்கள் கண்டேன் அவர்களிடம் உழைப்பை கண்டேன் மழைத் துளிகளின் ஈரம் கண்டேன் துரோகங்கள் கசந்ததை உணர்ந்தேன்[…]

மனதிற்குள் மணம் – கவிதை

(அ)ன்பின் இலக்கணம் கண்டவளோ!! (ஆ)ருயிர்த் தோழியாய் வந்தவளோ!! (இ)தயத்தில் இமையாய் இமைப்பவளோ!! (ஈ)ன்றெடுத்த தாயாய் இணைந்தவளோ!! (உ)றவுக்கு உயிர் ஊட்டியவளோ!! (ஊ)டலுக்கு இன்பம் பயிர்த்தவளோ!! (எ)ம் காதலுக்கு ஓவியமானவளோ!! (ஏ)ட்டில் எழுதாச் சித்திரமானவளோ!! (ஐ)யம் விலகி வந்தடைந்தவளோ!! (ஒ)ளிக்கும் சித்திரைத் திங்களுமானவளோ!! (ஓ)ரக்கண்ணில் என்னை மாய்த்தவளோ!! (ஔ)டதம் தந்துச் சென்றவளோ!!   கவிஞர்: மணிகண்டன், இறுதி ஆண்டு, Information Technology.

Final Year They Said – A Poem

  Final year they said Meant senior we thought. None to question. None to demand. None to fear. Attendance wasn’t seen Classes haven’t been Exams weren’t much Things were as such. Final year they said, Meant senior we thought. Then placements rolled in Interviews poured in Worst of stress faced While getting placed While projects[…]

மழை – கவிதை

  மழையின் தோல்வியோ! சுடரொளியால் விண்ணுயர் அடைந்தும் நினது சீரிய உயர்வினை போற்றினார் அல்லர் விண்ணுயர் அடைந்து அங்கே நிலைத்தவுன் வியத்தகு தூய்மையை வாழ்த்தினார் அல்லர் கலங்கியே நீயும் இன்று மண்ணுலகத்து கரைந்தே வீழ்ந்தாய்; ஐயோ! மனங்குன்றிய மானுடமே! உயர்வு புகழாநின் மனமின்று மண்ணில் வீழ்ந்தோன் வீழ்ச்சியை வாழ்த்துவதோ? வஞ்சம் கொண்டோரே வையத்தார் இவரை என்னென்று தூற்றுவென் தூவும் மழையே!   கவிஞர்: சாய் சுதர்சன், முதலாம் ஆண்டு, Automobile Engineering.    

நட்பின் வலி – கவிதை

கிடைத்ததோ ஒரு நட்பு….. என் வெற்றியில் என்னை விட ஆரவாரமாய்…… தோல்வியில் எனக்கு அரவணைப்பாய்…… என் இன்பத்தில் என் அன்னையைப் போல் மகிழும் தேவதையாய்…. துன்பத்தில் என் தந்தையைப் போல் துடிக்கும் தோழியாய்….. இருந்த நீ…..இன்று இல்லை….. பாலும் நீருமாய் இருந்த நம்மை பிரித்து…… உன்னை என் வாழ்வின் கானல் நீராய் மாற்றியது யாரோ? காதலென்று சொல்லியிருந்தால் சேர்த்து வைத்திருப்பேன் நட்பென்று சொல்லியிருந்தால் நம்முடன் சேர்த்துக் கொண்டிருப்பேன்… நீ புரிந்து எடுத்த முடிவோ…. புரியாமல் எடுத்த முடிவோ….[…]